Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் கோயிலில் காணிக்கையாக கிடைத்தது இத்தனை கோடியா.. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.!

2 கிலோ தங்கம், 16 கிலோ வெள்ளி, 46 வெளிநாட்டு நோட்டுகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்று இல்லாமல் இருந்திருந்தால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும், காணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் காணிக்கையாக கிடைத்தது இத்தனை கோடியா.. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.!

ThangaveluBy : Thangavelu

  |  29 July 2021 3:51 AM GMT

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். அறுபடை வீடுகளும் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.


மேலும், தைப்பூசம் மற்ற பண்டிகை காலங்களில் கூட்டம் களைக்கட்டும். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலம் பக்தர்கள் வருகை புரிவர். அப்படி வருகை புரிபவர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்திவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை மாதத்திற்கான காணிக்கையானது 2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635 ரூபாய் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி கோசாலை உண்டிலில் 1,54,758 ரூபாயும், யானை பராமரிக்கின்ற உண்டியலில் ரூ.30,105 காணிக்கை கிடைத்துள்ளது. மொத்தமாக 2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 ரூபாய் கிடைத்துள்ளது.


மேலும், 2 கிலோ தங்கம், 16 கிலோ வெள்ளி, 46 வெளிநாட்டு நோட்டுகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்று இல்லாமல் இருந்திருந்தால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும், காணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News