Begin typing your search above and press return to search.
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.40 லட்சம் முன்பணம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.40 லட்சம் முன்பணம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

By :
தமிழக அரசுப்பணியில் உள்ளவர்கள் சொந்தமாக வீடு கட்டவோ, அல்லது வாங்குவதற்கோ அரசு சார்பில் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதாவது முன்பு அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் மட்டுமே முன்பணமாக வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அதனை உயர்த்தி ரூ.40 லட்சமாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு முன்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story