Kathir News
Begin typing your search above and press return to search.

237 ஏக்கர் புறம்போக்கு நிலம் பட்டா நிலமானது: 54 பேருக்கு பிளாட் போட்டு முறைகேடாக விற்றது அம்பலம்! களமிறங்கிய சி.பி.சி.ஐ.டி!

Rs 4.5 crore mineral loot from govt land in TN

237 ஏக்கர் புறம்போக்கு நிலம் பட்டா நிலமானது: 54 பேருக்கு பிளாட் போட்டு முறைகேடாக விற்றது அம்பலம்! களமிறங்கிய சி.பி.சி.ஐ.டி!

MuruganandhamBy : Muruganandham

  |  30 Dec 2021 7:00 AM GMT

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட 182.50 ஏக்கர் அரசு நிலத்தில் இருந்து, சுமார் ரூ.4.5 கோடி மதிப்பிலான கனிமங்கள் தோண்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பான கோப்புகளை சிபிசிஐடியிடம் கொடுக்க தேனி காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற விசாரணை அதிகாரியை நியமிக்க சென்னை டிஐஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

2.13 கோடி மதிப்பிலான 182.50 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக 8 அரசு அதிகாரிகள், அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் உள்பட 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் டிசம்பர் 23ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பெரியகுளத்தில் உள்ள வடவீரநாயக்கன்பட்டி, தேவதானம்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மனைகள், 2016 முதல் 2019 வரை 54 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரனிடம் முதற்கட்ட நிலை அறிக்கையை சமர்ப்பித்து, மேல் நடவடிக்கைக்காக பெரியகுளம் சப்-கலெக்டர் சி.ஏ.ரிஷப்புக்கு அனுப்பினர்.

நில மனைகளின் 'ஏ' பதிவேட்டில் மாற்றம் செய்து, 237 ஏக்கர் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் பட்டாக்கள் தயாரிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

2015ல், முறையான அனுமதியின்றி கனிமங்களை தோண்ட முயன்றவர்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ரூ.16 லட்சம் அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து, இந்த நிலங்களை அதிமுகவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News