Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் மழையால் துயரத்தில் மூழ்கிய 6000 நபர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்பு சார்பில் தினமும் உணவு விநியோகம் !

சென்னையில் மழையால் துயரத்தில் மூழ்கிய  6000  நபர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற்றும்  சேவாபாரதி அமைப்பு சார்பில்  தினமும் உணவு விநியோகம்  !

DhivakarBy : Dhivakar

  |  12 Nov 2021 1:58 PM GMT

சென்னையில் மழையில் வாடிய மக்களுக்கு சேவாபாரதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இணைந்து தினமும் உணவு வழங்கி வருகிறது.

கடந்து சில தினங்களாக தலைநகர் சென்னையில் பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தி.மு.க அரசால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலாததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர், மக்கள் வசிக்கும் வீடுகளுக்குளேயே புகுந்ததால் மக்கள் துயரத்துக்குள்ளாகிவுள்ளனர்.

இந்நிலையில், மக்களின் துயர் துடைக்க ராஷ்ட்ரிய சேவா சங்கம் ( ஆர்.எஸ்.எஸ் ) மற்றும் சேவாபாரதி அமைப்பு இணைந்து கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு தினமும் உணவு தயாரித்து வழங்கி வருகின்றது.




இந்த நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில அமைப்பாளர் PM ரவிக்குமார்,மாவட்ட பொறுப்பாளர் ஓம்பிரகாஷ் மற்றும் நகர பொறுப்பாளர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிறார உணவு வழங்கிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா சங்கத்தின் இந்த சேவை அப்பகுதி மக்களுக்கு உதவிகரமாக அமைந்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News