Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரம் இது - சத்குரு பரபரப்பான ட்வீட்!

தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரம் இது - சத்குரு பரபரப்பான ட்வீட்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Feb 2021 12:37 PM GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் உடனடியாக பக்தர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பரபரப்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் 11,999 கோயில்களில் ஒரு கால பூஜைகூட இல்லாமல் அழிந்து வருகின்றது. 34,000 கோயில்களில் 10,000க்கும் குறைந்த வருமானத்துடன் போராடுகிறது.


மேலும் 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோயில்களை உடனடியாக பக்தர்களிடம் விடுங்கள்


தற்போது தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரம் இது என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்ததை டேக் செய்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு வீடியோ பதிவும் செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News