Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.!

அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.!

அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2021 5:03 PM GMT

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போது அவர் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சகாயம், கடந்த ஆண்டு 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவியேற்றார். பின்னர் பல மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிப்படுத்தினார். தற்போது கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்தார். விருப்ப ஓய்வு கேட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், சகாயம் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News