Kathir News
Begin typing your search above and press return to search.

சேலத்தில் லட்சுமி நாராயணசாமி கோயிலில் பூட்டியே கிடக்கும் மூலவர் சன்னதி: உடனடியாக திறக்க பக்தர்கள் கோரிக்கை!

சேலத்தில் லட்சுமி நாராயணசாமி கோயிலில் பூட்டியே கிடக்கும் மூலவர் சன்னதி: உடனடியாக திறக்க பக்தர்கள் கோரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  15 March 2022 1:05 PM GMT

சேலம் நகரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நாராயணசாமி கோயில் உள்ளது. இக்கோயில் கோட்டை அழகிரிநாதர் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர். தினமும் கடை உரிமையாளர்கள் பலர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர்தான் கடையை திறப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருத்தொண்டர்சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் இன்று காலை கோயிலுக்கு வருகை புரிந்தார். அவர் மூலவர் சன்னதி திறக்கப்படாமல் இருப்பதை பார்த்துள்ளார். கிரில் கேட் பூட்டப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் சேகர்பாபுவிடம் புகாராக குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளனர். கோயில் சன்னதி ஏன் இத்தனை நாட்கள் திறக்கப்படவில்லை என்ற காரணத்தையும் விசாரித்து வருகின்றனர். விரைவில் சன்னதி திறக்க வேண்டும் என்று பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News