Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவிக்கு பாலியல் தொல்லை - வி.சி.க. நிர்வாகி கைது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.சி.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை - வி.சி.க. நிர்வாகி கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Aug 2022 1:43 AM GMT

சென்னை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் மணிமாறன் என்பவர். இவர் தற்போது அந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் அங்கு படிக்கும் எட்டாம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவிகள் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களது பெற்றோர் கூறிய மாணவிகள் தைரியமாக முன்வந்து இவர் மீது தற்போது புகார் அளித்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.சி.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து பெற்றோரின் மாணவிகள் நேரடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கு கல்பாக்கம் காவல்துறைக்கு ஏற்கனவே புகார் அளித்து உள்ளார்கள். ஆனால் காவல்துறை இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்காத மாணவிகளிடம் வருத்தத்தை தந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஈ.சி.ஆர் சாலையில் தற்போது மறியலில் ஈடுபட்டு உள்ளார்கள்..இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளி சம்பத்திற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மேலும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது காவல்துறையின் மீதும் தற்போது பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் தெரிவிக்கப்ப ட்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சமயத்தில் தற்போது குற்றவாளி யார் என்பது அடையாளம் காணப்பட்ட அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பேரில் அவர் வி.சி.க கட்சி நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளராக இவர் இருப்பது தெரிய வர இவரை கைது செய்து போக்ஸோ சட்டத்தில் அடைந்துள்ளார்கள்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News