Kathir News
Begin typing your search above and press return to search.

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. பொதுமக்களே உஷார்.!

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. பொதுமக்களே உஷார்.!

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. பொதுமக்களே உஷார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jan 2021 11:33 AM GMT

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் (5ம் தேதி) 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதே போன்று இன்றும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குகிறது. பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தண்ணீர் திறப்பு காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News