Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய மறுக்கும் மதபோதகர் மகன் - போலீசார் வழக்கு பதிவு!

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யும் மறுக்கும் மத போதகரை குடும்பத்திற்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய மறுக்கும் மதபோதகர் மகன் - போலீசார் வழக்கு பதிவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Sep 2022 6:53 AM GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது வழக்கு பதிவாகியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மனைவி, மகன் மீதும் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மதப் போதகர் நீண்ட நாளாக வள்ளியூர் அருகே கலந்த பணி சீயோன் புரத்தை சேர்ந்த டேவிட் ஜேக்கப் ராஜ். இவருடைய இந்து கிறிஸ்தவ சபை அந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் பெரிய சபையாக இருந்து வருகிறது.


இவருடைய சபைக்கு வடலிவினையைச் சேர்ந்த பெண் ஒருவரின் வந்து செல்வது வழக்கம். நீண்ட நாட்களாக அந்த பெண் இந்த சபைக்கு வந்து செல்கிறார். மேலும் அவர் வரும்பொழுது மத போதகரை மகன் அணில் பவுல் அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தாராம். மேலும் அப்போ என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.


தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக அவரிடம் பேசுவதையும் அந்த மத போதகரின் மகன் நிறுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடம் தற்போது புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் டேவிட் ராஜ் அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News