Kathir News
Begin typing your search above and press return to search.

கோயம்பேடு புனித தாமஸ் கல்லூரியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ! ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு!

சென்னை, கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு புனித தாமஸ் கல்லூரியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ! ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  1 Dec 2021 12:24 PM GMT

சென்னை, கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆங்கிலத்துறையின் பேராசிரியர் தமிழ்செல்வன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் தங்கவேல் என்பவர் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தமிழ்ச்செல்வனை அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரி பெண்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வாயிலாக ஆபாசமான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது பற்றிய குறுஞ்செய்திகளை மாணவிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கல்லூரி பேராசியரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பேராசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகவே போலீசார் பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Source, Image Courtesy: News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News