Kathir News
Begin typing your search above and press return to search.

SG சூர்யா கைதுக்கு எம்.பி வெங்கடேசனை சராமரியாக கிழித்த சவுக்கு சங்கர்!

SG சூர்யா கைதுக்கு எம்.பி வெங்கடேசனை சராமரியாக கிழித்த சவுக்கு சங்கர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Jun 2023 9:22 AM GMT

நேற்று முன்தினம் நள்ளிரவு 11.15 மணி அளவில் பாஜக மாநில தலைவர் SG சூர்யா அவர்களின் வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி MP சு.வெங்கடேசன் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட குற்றத்திற்காக தற்போது SG சூர்யாவை கைது செய்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் என்பது அனைவரும் அறிந்ததே.



அந்த வகையில் எஸ்.ஜி.சூர்யா அவர்களின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் தொடர்ச்சியாக அரசுக்கு எழுந்து வருகிறது. ஆனால் அவர் சமூக வலைத்தளங்களில் அறிக்கையாக சொன்ன செய்தி உண்மைதான், அதில் கடலூருக்கு பதிலாக மதுரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கூறிய செய்தி உண்மை. கடலூர் பெண்ணாடத்தில் நடந்த குற்றத்தை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த குற்ற நடவடிக்கைக்கு பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ இருப்பது உறுதியாகி தான் இருக்கிறது.


இதுகுறித்து சவுக்கு சங்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "கடலூர் பெண்ணாடத்தில் இறந்த சுத்திகரிப்பு தொழிலாளி மரணத்துக்கு யார் காரணம்? என சொல்லுங்கள் வெங்கடேசன். வார்த்தை விளையாட்டுகள் ஒரு எம்.பிக்கு அழகல்ல என்று தன்னுடைய கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News