Kathir News
Begin typing your search above and press return to search.

சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி: நேற்று முதல் உலக உருண்டையை வைத்து பூஜை!

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் உலக உருண்டை உள்ளிட்ட நான்கு பொருட்கள் வைத்த பூஜை.

சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி: நேற்று முதல் உலக உருண்டையை வைத்து பூஜை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 March 2023 1:20 AM GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக முருக பெருமான் குடி கொண்டிருக்கும் இந்த ஒரு கோவிலில் பல்வேறு பக்தர்களும் வந்து அருளை பெற்று செல்லும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்பட்டு இருக்கிறது. மேலும் நாட்டில் எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்புமிக்க ஆண்டவர் உத்தரவு பெட்டி இந்த ஒரு திருத்தலத்தில் தான் அமைந்து இருக்கிறது. குறிப்பாக இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமான் தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களை வைத்து பூஜிக்க வேண்டும் என்று உத்தரவிடுவார்.


அதன்படி பக்தர்கள் தன்னுடைய கனவில் வந்த பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் கூறி பூஜிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அதன் பிறகு பூ போட்டு பார்த்த அனுமதி கிடைத்த பொருள் பிறகு அந்த ஒரு பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜைக்கு மட்டும் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 27ஆம் தேதி முதல் தற்போது வரை வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் ராஜா என்ற பத்தரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான் அகிலம் என்ற உலக உருண்டை மற்றும் அந்திரி என்ற பசு சிலை, இரண்டு திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறாராம்.



இது குறித்து பக்தர் கூறும்பொழுது, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் நேர்மறையான, அல்லது எதிர்மறையான தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்பொழுது 4 பொருட்கள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அகிலம், அந்தரி, அசுபம், 2 திருமாங்கல்ய சரடு ஆகிய பொருட்கள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாகத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News