Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோட்டில் 2000 பேர் கலந்து கொண்ட மௌண ஊர்வலம்..!

ஈரோட்டில் 2000 பேர் கலந்து கொண்ட மௌண ஊர்வலம்..!

ஈரோட்டில் 2000 பேர் கலந்து கொண்ட மௌண ஊர்வலம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2020 3:59 PM GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவதை காண முடிகிறது.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து, பெருந்துறை பழைய பேருந்து நிலைய ரவுண்டாணா வழியாக அண்ணா சிலை வரை மௌன ஊர்வலம் சென்றனர்.


இந்த ஊர்வலம் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பழனிச்சாமி, மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை காண முடிந்தது.

மேலும், அனைவரும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முககவசம் அணிந்து சென்றனர். நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கு முககவசம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News