சிவகங்கை "டுவென்லா அன்பகம்" கிறிஸ்தவ இல்லத்தில் வாலிபர் மர்ம மரணம்! ஏன்?
By : Kathir Webdesk
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மனநிலை பாதித்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் உள்ளது. கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 19 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். பாதுகாப்பு இல்லத்தின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர் புளியடிதம்பம் அருகே உறுதிகோட்டையைச் சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நடேசபுரத்தில் உள்ள டுவென்லா அன்பகம் என்ற காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவருடன் மேலும் 27 சிறுவர்கள் தங்கியுள்ளனர். ஆட்டோவில் சென்று வரும் இளைஞர் திடீரென காணவில்லை. இது குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரித்தனர்.
இல்லத்தின் பின்புற கிணற்றில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதன் நிர்வாகி மீது நடவடிக்கை கோரி, உறவினர்கள் மதுரை-தொண்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து பின் மறியலை கைவிட்டனர்.
காப்பக நிர்வாகி அற்புதராஜ், பாதிரியார்கள், ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர். மகனின் மூக்கு, காதில் ரத்தம் வடிந்துள்ளது. உடலில் ரத்த காயங்கள் உள்ளன. இதன் மூலம் மகன் இறப்பில் மர்மம் இருக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என இளைஞரின் தந்தை கூறினார்.
Inputs From: Dinamalar