Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மணல் திருட்டு - 15 கோடி எங்கே என கேட்கும் நீதிமன்றம்?

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி அளவில் திருட்டு நடந்து இருப்பது அம்பலமாக இருக்கிறது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மணல் திருட்டு - 15 கோடி எங்கே என கேட்கும் நீதிமன்றம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Dec 2022 2:03 PM GMT

சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்த முன்னாள் தலைமை பொறியாளர் மீது தற்போது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாநகராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புகார் நடந்திருப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தற்போது நிதி அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர் இடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.


அதில் முதலில் அரவிந்த் என்பவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மணல் திருட்டு செய்திருக்கிறார் என்றும், அரசு திட்டத்தின் கீழ் சட்டப்பிரதமாக மணல் கடந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மதுரை உயர்நீதிமன்ற கிளை தன்னுடைய தாக்கல் மனுவில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கு அடுத்து அரவிந்த் பாலாஜி இடம் பேசினேன். மத்திய அரசு திட்டத்தில் திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கு 30 அடிக்கு மேல் ஆழமாக மண் தோண்டப்பட்டது.


இங்கு வளமான மணல் கிடைத்தது. அந்த மணலை முறையாக கனிமவளத் துறையில் இருக்க தகவல் தெரிவித்து மணலை ஒரு இடத்தில் சேர்த்து வைக்க வேண்டும். ஆனால் தலைமை பொறியாளர் இருந்த அவர் அரசு கனிமவளத்துறை உள்ளிட்ட எந்த துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் 15 கோடி ரூபாய்க்கு அளவிற்கு மணல்களை சட்டவிரதமாக கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பொறியாளர் அரவிந்த் பாலாஜி அவர்களிடம் நீதிபதிகள் இதுபோன்று செயல்களில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு, இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு தள்ளி வைத்தார்.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News