Kathir News
Begin typing your search above and press return to search.

வெயிலின் தாக்கத்தால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.!

தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மார்ச் 13ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  9 March 2021 11:18 AM GMT

தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மார்ச் 13ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.





இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.




பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக நாளை முதல் 13ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாபநாசம் பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News