Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மழை காரணமாக சென்னையில் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்!

ThangaveluBy : Thangavelu

  |  13 Nov 2021 4:05 AM GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மழை காரணமாக சென்னையில் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் உள்ளனர். அது போன்றவர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு முகார்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. பெயர் சேர்த்தல், மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாறுதல் உள்ளிட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்பவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மற்றும் குடும்ப அட்டை ஆகியவகைகளில் ஏதாவது ஒன்று ஜெராக்ஸ் கொடுக்கலாம். இந்த சிறப்பு முகாம் நவம்பர் 27, 28 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.

மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்கள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியால் அவதியுற்று வருகின்றனர். அது போன்ற காரணங்களினால் இன்று வாக்காளர் சிறப்பு முகாமை வேறு நாட்களுக்கு மாற்றுவதற்கு மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் சென்னையில் மட்டும் சிறப்பு முகாமை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy:Nakkheeran


Next Story
கதிர் தொகுப்பு
Trending News