Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசு மருத்துவமனையின் அவலம்: வலது கால் வலிக்கு சென்ற மூதாட்டிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை!

தமிழக அரசு மருத்துவமனையின் அவலம்: வலது கால் வலிக்கு சென்ற மூதாட்டிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2022 3:16 AM GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கல்குவாரியில் வேலைபார்ப்பவர் குருவம்மாள் என்ற மூதாட்டி. இவர் கால் வலிக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த குருவம்மாள் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இடது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை செய்தனர்.

இதனால் மயக்கம் தெளிந்து பார்த்த குருவம்மாள் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முருகவேல் விசாரணை நடத்தி வருகின்றார். இது போன்று அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக செயல்படும் மருத்துவர்களால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News