நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.!
நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.!
By : Kathir Webdesk
சென்னையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
அடுத்த மாதம் 2ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. இது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் அதில் அறிவிக்க வேண்டிய சிறப்பு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் தமிழகத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.