Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக அரசின் திட்டமிட்ட வலையில் வீழ்த்தப்படுகிறாரா..? இண்டர்செக்ஸ் ஆர்வலர் கோபி சங்கர் மீது உணவகத்தில் அரங்கேறிய அத்துமீறல்..!

DMK Govt accused of trying to trap intersex activist in false cases, human right activists condemn harassment

திமுக அரசின் திட்டமிட்ட வலையில் வீழ்த்தப்படுகிறாரா..? இண்டர்செக்ஸ் ஆர்வலர் கோபி சங்கர் மீது உணவகத்தில் அரங்கேறிய அத்துமீறல்..!

OPindia

MuruganandhamBy : Muruganandham

  |  7 Sep 2021 3:12 AM GMT

திமுக அரசால் இண்டர்செக்ஸ் ஆர்வலர் கோபி சங்கருக்கு நடந்த துன்புறுத்தலுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், செங்கல்பட்டு வருவாய் ஆய்வாளர் (மகாபலிபுரம்) ஜேம்ஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஐஏஎஸ், காவல் ஆய்வாளர் மகாபலிபுரம் டி.நடராஜன் ஆகியோர் கோபி சங்கர் மீது நடத்திய மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையை தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகத்தின் உறுப்பினர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலின் (என்டிசிபி) தென் பிராந்திய பிரதிநிதி மற்றும் பாலின மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு நிறைய பங்களித்தவர் கோபி சங்கர் என்று கூறியுள்ளனர்.

கோபிசங்கர், கடந்த வாரம் ஒரு முகநூல் பதிவில், "திமுக அரசு தன்னை ஒரு போதை மருந்து வழக்கில் சிக்க வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். என்னை அழிக்க மேலும் பல பொய் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர், நான் போதைப்பொருள் கடத்தி வருகிறேன் என்று போலி கதைகளை எழுதுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.





மதுரை காவல்துறை அதிகாரிகளால் உடல் ரீதியான துன்புறுத்தல்:

ஆகஸ்ட் மாதத்தில், திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலின் தெற்குப் பிரதிநிதியான கோபி சங்கர், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த சோதனையின் போது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரைத் தவறாகப் பேசியதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு குறைகேட்புக் கூட்டத்திற்காக திருநங்கைகள் 20 பேருடன் நிற்கும் போது அதிகாரிகளால் கூட்டம் குறுக்கிடப்பட்டது, நாங்கள் கால்நடைகளைப் போல் நடத்தப்பட்டோம். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என் மார்பில் கையை வைத்துக்கொண்டு, நாங்கள் சொல்வதைக் கேட்க விரும்பாமல் என்னைத் தள்ளினார், "என்று குற்றம் சாட்டினார்.

கோபிசங்கர் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நந்த், கோவிட் -19 விதிமுறைகளை மீறி உணவகத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்ததாக கூறினார். உணவக உரிமையாளர் மற்றும் கோபி மீது தொற்று நோய்கள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடு எதுவும் நடக்கவில்லை, முறையான விசாரணையின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது "என்று அந்த அதிகாரி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News