Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு - மின்வெட்டால் இரவு நேரத்தில் தூக்கத்தை இழந்த பொதுமக்கள்!

தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு - மின்வெட்டால் இரவு நேரத்தில் தூக்கத்தை இழந்த பொதுமக்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2022 1:45 PM GMT

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கொசுக்கடியில் மக்கள், தூக்கத்தை தொலைத்து அவதியுற்று வருகின்றனர். மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி வீடுகளில் முடங்கினாலும் மின்சாரம் இல்லாமல் புழக்கத்தில் அவதியுறும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்வெட்டு நீடித்து வருகிறது. அதே போல திருப்பரங்குன்றம், நிலையூர், ஓம்சக்தி நகரிலும் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு பிரச்சினை நீடித்தது. இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை கொசுக்கடியில் தூக்கத்தை தொலைத்தனர்.

அதே போன்று கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டனர். இதனால் கொதித்து எழுந்த மக்கள் சாலைகளில் இறங்கி போராடியதையும் காணமுடிகிறது. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் இருட்டில் மெழுகுவர்த்தி வைத்து படிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காண முடிந்தது. மின்வெட்டு பிரச்சினைக்கு திமுக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source,Image Courtesy: One India Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News