Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் 136 போலீசார் உயிரிழந்துள்ளனர் !- டி.ஜி.பி. சைலேந்திர பாபு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 136 போலீசார் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் 136 போலீசார் உயிரிழந்துள்ளனர் !- டி.ஜி.பி. சைலேந்திர பாபு !

ThangaveluBy : Thangavelu

  |  12 Aug 2021 7:54 AM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 136 போலீசார் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, கொரோனா தொற்றின்போது முக்கியமாக களப்பணியாற்றியவர்கள் போலீசார்தான். தமிழகத்தில் 136 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் உயிர் தியாகத்தை போலீசார் செய்துள்ளனர். அதே போன்று 98 போலீசார் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 2வது தடுப்பூசி 92 சதவீதம் முடித்துள்ளனர். விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:News 18 Tamil

https://www.puthiyathalaimurai.com/newsview/112673/136-police-dead-due-to-corona

Next Story
கதிர் தொகுப்பு
Trending News