Kathir News
Begin typing your search above and press return to search.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு !

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு !

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 2:30 AM GMT

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

இதில் கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஒன்றிய வார்டு கவுன்சிலர் என்று மொத்தம் 4 அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்காளர்களும் 4 ஓட்டு போட வேண்டும்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாலை ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News