Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் !

தமிழகத்தில் அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் !

ThangaveluBy : Thangavelu

  |  7 Sep 2021 1:04 PM GMT

தமிழகத்தில் அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனடும், நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source, Image Courtesy: News 7


Next Story
கதிர் தொகுப்பு
Trending News