Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்து வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம்!

ThangaveluBy : Thangavelu

  |  5 Sep 2021 11:40 AM GMT

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்து வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடரும். அதிகபட்சமாக பேராவூரணியில் 5 செ.மீ., மழையும், காவேரிப்பாக்கத்தில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114856/Symbol-of-the-storm-in-the-Bay-of-Bengal-Heavy-rain-will-continue-for-5-days-Meteorological-Center

Next Story
கதிர் தொகுப்பு
Trending News