கொரோனா 2வது அலை.. மேலும் சில கட்டுப்பாடுகள்.. தமிழக தலைமைச்செயலாளர் ஆலோசனை.!
இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

By : Thangavelu
உலகம் முழுவதும் இன்று அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெரந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. ஆனால் தற்போது 2வது அலை மிகவும் வீரியத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி கொரோனா தொற்று தென்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக உயர்ந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையும் வேகமாக பரவி வருகிறது. முடிந்த வரை தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டு வருகிறது. இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று பரவல் 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே மேலும், சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொற்று பரவல் உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் வெளியில் சென்றுவர வேண்டும்.
