Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கட்டுப்பாடுகள் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

ThangaveluBy : Thangavelu

  |  8 April 2021 1:35 PM GMT

தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.




தேர்தலுக்கு முன்புவரை கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டதால் மக்கள் முககவசம் இன்றி பங்கேற்றனர். இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் மற்றும் தலைவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் 4,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 1869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தொற்று அதிகரிக்க கூடும் என்பதால் அரசு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News