Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கோயில் குளம் மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகாமையில் மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கோயில் குளம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கோயில் குளம் மீட்பு!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 3:12 AM GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகாமையில் மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கோயில் குளம் மீட்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி அருகே உள்ள அகரம்மேல் ஊராட்சியில் 40 சென்ட் நிலத்தில் மூக்குத்திக் குளம் ஒன்று இருந்து வந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மண் கொட்டி மூடப்பட்டு சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வைத்து மூடப்பட்ட குளம் மறுபடியும் தோண்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News