Kathir News
Begin typing your search above and press return to search.

சீனிவாசன் என்ற பெயரில் பல இடங்களில் சுற்றிய தீவிரவாதி - கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ வெளியிட்ட பகீர் தகவல்

கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக மீண்டும் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.

சீனிவாசன் என்ற பெயரில் பல இடங்களில் சுற்றிய தீவிரவாதி - கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ வெளியிட்ட பகீர் தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2022 2:41 AM GMT

கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக மீண்டும் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கோவையில் கார் குண்டு வெடிப்பு நடந்த சம்பவத்தில் ஏற்கனவே ஆறு பேர் கைதாகியுள்ள நிலையில் தற்பொழுது பொத்தனூரை சேர்ந்த முகமது தவ்பிக், உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான், குன்னூரை சேர்ந்த உமர் பரக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனிவாசன் என்ற பெயரில் உமர் பரூக் பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமோசா முபீன் உமர் பருக் வீட்டில் அடிக்கடி சதி கூட்டங்களை நடத்தியதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News