Begin typing your search above and press return to search.
தருமபுரியில் தைபூசத் திருவிழா.. தேரை வடம்பிடித்து இழுத்த பெண்கள்.!
தருமபுரியில் தைபூசத் திருவிழா.. தேரை வடம்பிடித்து இழுத்த பெண்கள்.!

By :
தைப்பூசத்தை முன்னிட்டு தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெண்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். இந்த திருவிழால் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
தருமபுரி நகரில் உள்ள குமாரசாமி பேட்டையில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 7 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வருடம் வருடம் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தேரை இழுத்து வருகின்றனர். அதே போன்று இந்த வருடம் நடந்த தேர்த்திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story