Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.

தஞ்சை: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

ThangaveluBy : Thangavelu

  |  9 Oct 2021 11:23 AM GMT

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன், ராஜலட்சுமி தம்பதிக்கு பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை அவருக்கு உதவுவது போன்று நடித்து நேற்று காலை ஒரு பெண் கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திச் சென்றார். இது பற்றிய காட்சிகளை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அப்போது பெண் ஆட்டோவில் ஏறிச்செல்வது தெளிவாக தெரிந்தது.

இதனை வைத்து போலீசார் தனிப்படை வைத்து தீவிரமாக குழந்தையை தேடிவந்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் வைத்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததில் தாய் உட்பட அவரது உறவினர்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.

இது போன்று குழந்தை கடத்தல் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்ளின் கோரிக்கையாக உள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News