Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்! பள்ளி விடுதியே சட்ட விரோதமாக இயங்கி வந்தது அம்பலம்!

Thanjavur school’s ‘hostel’ an illegal entity NCPCR

தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்! பள்ளி விடுதியே சட்ட விரோதமாக இயங்கி வந்தது அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2022 1:10 PM GMT

தஞ்சாவூர் பள்ளி மாணவி படித்து வந்த விடுதி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழு, அதன் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையில், தஞ்சாவூர் ரயில்வே அதிகாரிகள் விருந்தினர் மாளிகைக்கு சென்று, 17 வயது சிறுமியின் தற்கொலை குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.

இக்குழுவினர், பள்ளியின் பழைய மாணவர்கள், கிராம மக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். சிறுமியின் தாய்வழி தாத்தா, பாட்டி, சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பிரேத பரிசோதனை செய்தவர்களும் குழுவினர் முன் வாக்குமூலம் அளித்தனர். பின்னர், குழு பள்ளிக்கு புறப்பட்டது, அதன் உறுப்பினர்கள் அனைத்து பதிவுகள் மற்றும் விடுதியை ஆய்வு செய்தனர்.

குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பள்ளி தாளாளர் ரேச்சல் மேரி மற்றும் தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி ஆகியோர் பதிலளித்தனர். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கனூங்கோ, சிறுமி தற்கொலைக்கு முயன்ற இடத்தை குழந்தைகள் இல்லம் என்றும், அதை விடுதி என்று குறிப்பிடக் கூடாது என்றும் கூறினார்.

குழந்தைகள் காப்பகமாக பதிவு செய்யப்பட்டு, கடந்த நவம்பரில் பதிவு காலாவதியானது. எனவே, இது தற்போது ஒரு சட்டவிரோத நிறுவனம். எனவே, ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News