Kathir News
Begin typing your search above and press return to search.

30 வருடங்களாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கிருஸ்துவ திருச்சபை - மாநகராட்சி அதிகாரிகளை சீல் வைக்க விடாமல் போராட்டம்

மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

30 வருடங்களாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கிருஸ்துவ திருச்சபை - மாநகராட்சி அதிகாரிகளை சீல் வைக்க விடாமல் போராட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Aug 2022 1:09 PM GMT

மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மணலி அண்ணா தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பெரோக்கா கிறிஸ்தவ சபை செயல்பட்டு வருகிறது, இங்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன இந்த கிறிஸ்தவ சபை அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க வந்தனர்.


இது பற்றி அறிந்த பெண்கள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் சபைக்கு வந்தனர், அங்கு அவர்கள் சபைக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டடத்தில் உள்ளே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சபையிலிருந்து வெளியேறினர், அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் பிறப்பு கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்தனர்.


Source - Dailythanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News