Kathir News
Begin typing your search above and press return to search.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.க - கொதிக்கும் டாக்டர்கள்

தி.மு.க அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றாமல் பிரித்தாலும் சூழ்ச்சியை ஈடுபடுவதாக டாக்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.க - கொதிக்கும் டாக்டர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  2 July 2022 5:46 AM GMT

தி.மு.க அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றாமல் பிரித்தாலும் சூழ்ச்சியை ஈடுபடுவதாக டாக்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, 'கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 118 டாக்டர்களை பழிவாங்கும் நோக்கோடு இடமாறுதல் செய்து தண்டித்தது,

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் டாக்டர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார், ஆனால் இதுவரை டாக்டர் கோரிக்கை நிறைவேற்றவில்லை இதனால் விரக்தியடைந்த டாக்டர்கள் மீண்டும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும் வரை உணரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டாக்டர் சங்கங்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கடைப்பிடித்து பிளவுபடுத்துகின்றனர் இவர் செய்ய இவை சரியான அணுகுமுறை இல்லை.

அரசு டாக்டர் அனைவரும் 2018 ல் கூட்டு போராட்ட குழு அமைத்து கையெழுத்திட்டு வழங்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் அதைவிடுத்து போராடும் டாக்டர்களை சூழ்ச்சி செய்து பிரிப்பது அரசின் வேலை அல்ல' என அவர் கூறினார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News