Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 9:31 AM GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழகத்தில் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


மேலும், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் அனுமதிக்கவில்லை. மக்கள் அதிகமாக கூடினால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டதால் இந்த முடிவு என்று சொல்லப்பட்டது.


தற்போது வரை மெரினாவில் மக்கள் செல்வதற்கு அறிவிப்பு வெளியிடாமல் அரசு மவுனம் காத்து வந்தது. தற்போது அரசு அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை வாசிகள் அனைவருக்கும் பொழுதுபோக்கான ஒரே இடம் மெரினா கடற்கரை மட்டுமே.


மேலும், தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 200 பேர் வரை பங்கேற்கக்கூடிய மத, சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.


மேலும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 7 முதல் கல்லூரிகளில் இறுதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News