Kathir News
Begin typing your search above and press return to search.

பிப்ரவரி 2ல் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்.!

பிப்ரவரி 2ல் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்.!

பிப்ரவரி 2ல் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2021 7:06 PM GMT

கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் பிப்ரவரி 2ம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படும் என பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் மோதுவார் என கூறப்படுகிறது. முதலமைச்சர் கேள்வி, பதில்களுக்கு ஸ்டாலின் தாக்குப்பிடிப்பாரா என்று தெரியவில்லை. எப்போது பேரவை கூடினாலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்து விடுகின்றன.

தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு. இதனை பேரவையில் முதலமைச்சர் கேள்வி எழுப்பினாலே திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டம் பிடித்து விடுகிறார்.

இந்நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படும் என பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு இடையில் நடைபெறும் கூட்டம் இது ஆகும். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News