Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திலேயே அதிக நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் - 1,621.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் உருவாகிறது.!

தமிழகத்திலேயே அதிக நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் - 1,621.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் உருவாகிறது.!

தமிழகத்திலேயே அதிக நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் - 1,621.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் உருவாகிறது.!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  4 Dec 2020 12:35 PM IST

கோவை மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் அவிநாசி சாலை முதன்மையானதாகும். தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இருந்து கோவைக்கு வர இந்தச் சாலை பிரதானமாக உள்ளது. அவிநாசி சாலையில் 10.10 கி.மீ நீளமுள்ள உயரமான நெடுஞ்சாலை திட்டத்திற்கான தொடக்க விழாவை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னின்று நிகழ்த்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நவம்பர் 21 அன்று சென்னையில் இருந்து 1,621.30 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஃப்ளை ஓவர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆறு வழிச்சாலையான இது நகரின் உப்பிலிபாளையத்தில் இருந்து தொடங்கி கோல்ட்வின்ஸில் தரையிறங்கும். இது நகரத்தின் ஐந்து முக்கிய சாலைகளை இணைக்கிறது.

மாநிலத்திலேயே அதிக நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் இதுவாகும். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அவிநாசி சாலை உயர்மட்டப் பாலத் திட்டப்பணி குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வேலுமணி, பிராந்தியத்தின் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் கே பழனிசாமி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என்றார். 1,500 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது, மேலும் நொய்யல் நதியில் ரூ .230 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News