Kathir News
Begin typing your search above and press return to search.

முறையில்லாமல் சர்ச் அனுமதித்த புதுக்கோட்டை கலெக்டர் - அதிரடி இடைக்கால தடை விதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லாச் சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

முறையில்லாமல் சர்ச் அனுமதித்த புதுக்கோட்டை கலெக்டர் - அதிரடி இடைக்கால தடை விதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Mohan RajBy : Mohan Raj

  |  29 Jun 2022 10:56 AM GMT

சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லாச் சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் புதூர் அக்ரஹாரம் சிவகுமார் தாக்கல் செய்த மனுவில் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சர்வே எண்ணில் சர்ச் கட்ட சம்பந்தமான அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை, இந்த காரணத்தினால் தடை செய்யப்பட்ட ஒலிபரப்பிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சர்ச் கட்டினால் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படும் என கூறி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார், இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய தடையில்லா சான்றிதழக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சர்ச் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி வழங்கக் கூடாது என அரிமளம் பேரூராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை ஜூலை 25'ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News