Kathir News
Begin typing your search above and press return to search.

ஆதீன மடங்கள் RTI சட்டத்தின் கீழ் வருமா - மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தருமபுரம் ஆதீன மடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதீன மடங்கள் RTI சட்டத்தின் கீழ் வருமா - மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 July 2022 7:21 PM IST

தருமபுரம் ஆதீன மடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழமையான ஆதீன மரங்களில் ஒன்றாக எங்கள் மடம் உள்ளது. சைவ சித்தாந்த மரபை சார்ந்துள்ளோம் அரசிடமிருந்து எந்தவித உதவியோ, நிதியோ பெறுவது இல்லை மடத்தின் சொந்த நிதியை மட்டும் கொண்டு இயங்குகிறது


ஆதீன மடம் மற்றும் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் வரும் ஆதினம் மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்பதால் ஆதீனங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதினம் மடங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என கூறி உத்தரவிட்டார்.


Source - ABP nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News