தமிழகத்தில் அடுத்த சீரழிவு - மெல்ல பெருகும் ஒரு நம்பர் லாட்டரி
தமிழகத்தில் மீண்டும் ஒரு நம்பர் லாட்டரி கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது.
By : Mohan Raj
தமிழகத்தில் மீண்டும் ஒரு நம்பர் லாட்டரி கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது.
தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வட்ஸஅப் மூலம் ஆட்களை சேர்த்து சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுரை கூறியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் விற்பனையாகிறது. அதனை ஆன்லைன் மூலம் வாங்கும் கும்பல் ஈரோடு, நாமக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாட்ஸ் அப் மூலம் குழுக்கள் அமைத்து கூலி தொழிலாளிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் தொகையாக ஒரு நம்பர் லாட்டரிக்கு 33 ரூபாய் வீதம் பணம் வசூலிக்கும் கும்பல், லாட்டரியை ஒரு சிறிய தொகை வெற்றி பெற செய்து பின்பு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வைத்து பண மோசடி பண்ணுவது என மக்களை ஏமாற்றி வருகிறது.