Kathir News
Begin typing your search above and press return to search.

அம்மன் கோயில் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்ற திருடன்: சிசிடிவி காட்சியில் அம்பலம்!

தஞ்சாவூர் மாவட்டம் அருகே அம்மன் கோயில் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பி சென்ற திருடனின் சிசிடிவி காட்சி தற்போது அம்பலமாகியுள்ளது.

அம்மன் கோயில் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்ற திருடன்: சிசிடிவி காட்சியில்  அம்பலம்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Dec 2021 9:54 AM GMT

தஞ்சாவூர் மாவட்டம் அருகே அம்மன் கோயில் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பி சென்ற திருடனின் சிசிடிவி காட்சி தற்போது அம்பலமாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நவிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது நாடியம்மன் கோயில். இந்த கோயிலில் கடந்த 9ம் தேதி திருடன் ஒருவன் முககவசம் அணிந்தவாறு, கையில் இரும்பு ராடை வைத்து கோயிலின் பூட்டை சுமார் ஒரு மணி நேரம் உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் அந்த பூட்டை உடைக்க முடியவில்லை.


இதனால் ஏமாற்றத்துடன் அந்த திருடன் கோயிலை விட்டு வெளியேறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது பற்றிய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது. பூட்டு உடைபடாமல் இருந்ததால் பல லட்சம் ரூபாய் அளவிலான பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer


Next Story
கதிர் தொகுப்பு
Trending News