Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்று மாதமாக சம்பளம் போடாத தி.மு.க. அரசு: கடுப்பில் கல்வி அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை!

மூன்று மாதமாக சம்பளம் போடாத தி.மு.க. அரசு: கடுப்பில் கல்வி அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை!

ThangaveluBy : Thangavelu

  |  24 Jan 2022 12:15 PM GMT

மூன்று மாதங்களாக சம்பளம் போடாத திமுக அரசு கண்டித்து வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியையால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பெண் ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என்று தெரிகிறது. இதனால் சம்பளம் ஏன் போடவில்லை என்று வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அலுவலகத்தில் சரியான பதில் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காத அரசை கண்டித்து நேராக வட்டார கல்வி அலுவலகத்திற்குள் நுழைந்த ஆசிரியை, அங்கு இருந்த கம்பியூட்டர் மற்றும் ஆவணங்களை கீழே தூக்கி எறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது மூன்று மாதமாக சம்பளம் போடாமல் இருந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று புலம்பினார். தனது குழந்தைகளை சுடுகாட்டிலா விடுவது பணம் இல்லாமல் என வேதனையுடன் புலம்பியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உடனடியாக அரசு அதிகாரிகள் இவருக்கு சம்பளம் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News