Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும்: பெண் சாமியார் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும் என்று பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளிமாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டத்தை பெற்றவர் ஆவார்.

தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும்: பெண் சாமியார் எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  27 Nov 2021 11:23 AM GMT

தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும் என்று பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளிமாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டத்தை பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக ஸ்ரீ பவித்ரா காளிமாதா திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். அப்போது ரமணாஸ்சிரமம் காளி கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் செய்தார். கிரிவலம் செல்வதற்கு முன்னர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அதன் பின்னர் அவர் கூறும்போது, சிறுவயதில் முதலே காளிமாதா மீது எனக்கு மிகுந்த பக்தி உண்டு. அன்று முதல் தற்போது வரை காளிமாதா வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இரவு நேரங்களில் மயான வழிபாடும் நடத்துவேன்.

மேலும் உலகத்தில் எங்கேனும் அதர்மம் தலை தூக்கும் பட்சத்தில் அங்கு சிவன், காளியை அவதாரம் எடுக்க வைப்பார். அது மட்டுமின்றி உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு நெருங்கியவர் ஆவார். இதனால் அண்ணாமலையார் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று உலகத்தில் உள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும். மேலும், தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு பின்னர் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும். அதன் பின்னர் அமைதி நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News