Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூர்: வீட்டு வாசலில் விளையாடிய சிறுவனை கடித்துக் குதறிய 5 தெருநாய்கள்!

திருப்பூரில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய 5 தெருநாய்களால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனால் திருப்பூர் மாநகர் பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: வீட்டு வாசலில் விளையாடிய சிறுவனை கடித்துக் குதறிய 5 தெருநாய்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  17 Sep 2021 10:55 AM GMT

திருப்பூரில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய 5 தெருநாய்களால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனால் திருப்பூர் மாநகர் பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், தாராபுரம் சாலை தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் பஞ்சு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 6 வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதி பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்த பிரகதீஸை 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து கடித்து குதறியுள்ளது. சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News