Kathir News
Begin typing your search above and press return to search.

திருவள்ளூர்: கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது.!

திருவள்ளூர்: கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது.!

திருவள்ளூர்: கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 7:04 PM GMT

திருவள்ளூர் அருகே கோயில் சிலைகளை திருடிச்சென்று கேரளாவில் விற்க எடுத்துச்சென்ற போது 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அன்னதான காக்கவாக்கம் என்ற ஊரில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 சிலைகள் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பெரியபாளையம் கூட்டுச்சாலையில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகித்துக்கு இடமாக வந்த 7 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின்னாக பதில் அளித்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்தான் சிலைகளை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News