Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் அருகில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொலை முயற்சி - திருவள்ளூரில் பயங்கரம்

கோயில் அருகில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொலை முயற்சி - திருவள்ளூரில் பயங்கரம்

ThangaveluBy : Thangavelu

  |  6 May 2022 10:16 AM GMT

திரொபதி அம்மன் கோயில் அருகாமையில் மது குடித்ததை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவரை குண்டர்களை ஏவி கொலை முயற்சி செய்த கும்பலை பொதுமக்களை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் அருகே உள்ள பூரிவாக்கம் என்ற கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த முருகன், சரண்ராஜ் இரண்டு பேரும் திரௌபதி அம்மன் கோயில் அருகாமையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் அப்பகுதியில் செல்லும்போது, கோயில் அருகாமையில் மது குடிக்கக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதனை தொடர்ந்து முருகன் தன்னுடைய கூட்டாளியிடம் நடந்த சம்பவத்தை சொல்லி உடனடியாக ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஆயுதங்களுடன் குண்டர்கள் 6 பேர் கார்த்திக்கை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இதில் கார்த்திக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த ஊர் மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய வந்த குண்டர்களை பொதுமக்களை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News