Kathir News
Begin typing your search above and press return to search.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உடனடி கடிதம்

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் மேலிடத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உடனடி கடிதம்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Feb 2023 3:31 AM GMT

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் நடத்திய தாக்குதல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் உடனடியாக கடிதம் ஒன்றை மேலிடத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறார். குறிப்பாக அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் கடிதம் எழுதி இருக்கிறார்.


அந்த கடிதத்தில் இது பற்றி கூறுகையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக மீனவர்களின் உடைகள் மீட்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அரசு வலியுறுத்த வேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முழு ஒத்துழைப்பு தருமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.


ஏற்கனவே ஏமன் நாட்டில் தமிழக மீனவர்கள் சிக்கி இருந்த பொழுது, அவர்களை மீட்டு தருமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி இருந்தார். அந்த வகையில் தற்பொழுதும் தமிழக மீனவர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டி அண்ணாமலை அவர்கள் கடிதம் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News