Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 14ல் இருந்து தொடக்கம்.!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 14ல் இருந்து தொடக்கம்.!

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2021 7:17 AM GMT

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது அதிகமாகவே இருந்தது. இதற்கு காரணமாக கொரோனா பெருந்தொற்றால் பல லட்சம் பேர் தங்களது வேலையை இழந்தனர். இதனால் அவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு வசதியின்றி அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க தொடங்கினார்.




இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய மாணவர்கள் சேர்க்கை கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில், அரசு மற்றும் உதவி பெறுகின்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகின்ற ஜூன் 14ம் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. இதற்காக வருகின்ற ஜூன் 14ம் தேதி முதல் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருக்க வேண்டும் என சுற்றிறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News