Kathir News
Begin typing your search above and press return to search.

உமையாள் கிராம மக்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய நோட்டீஸ்: மக்கள் போராட்டம்!

உமையாள் கிராம மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது வாடகை செலுத்துவதற்கான நோட்டீசை அனுப்பி இருக்கிறது.

உமையாள் கிராம மக்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய நோட்டீஸ்: மக்கள் போராட்டம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Jan 2023 2:34 AM GMT

விழுப்புரம் மாவட்டம் விக்ரம்வண்டி அருகே தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வாடகை செலுத்துவதற்கான நோட்டு அந்த பகுதி மக்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நோட்டீஸ்க்கு எதிராக அந்த மக்கள் தற்பொழுது போராட்டத்தில் கலந்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அளித்த நோட்டுசை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்பான மனுவை அளித்து இருக்கிறார்கள். விக்கிரவாண்டி அடுத்து உமையாள் கிராமம் காந்திநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்பொழுது தொடர்பான மனு ஒன்று அழிக்கப்பட்டு இருக்கிறது.


உண்மையால் கிராமத்தில் வசிக்கும் சுமார் 160 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒரு பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு முறையான வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறது. இவர்கள் முறையாக வீட்டு வரி கட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் தற்பொழுது அந்த ஒரு இடம் தானுகேஸ்வர சுவாமி கோயில் பெயரில் உள்ளதாகவும், அதனால் தங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை தரவேண்டும் என்றும் அதிகாரிகள் இது தொடர்பான நோட்டீஸ் ஒன்றை அழுத்தி இருக்கிறார்கள்.


வீடு வாடகையாக ரூபாய் எழுபதாயிரத்தில் இருந்து 2 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டு அனுப்பப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு நிலத்தில் நீண்ட காலமாக வசித்து வரும் எங்களது பெயரில் அந்த ஒரு நிலத்தை பட்டா செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தற்பொழுது மனு ஒன்று எழுதுகிறார்கள் என்றும் அவர்கள் போராடி வருகிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News